பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
ஹிந்தி திரையுலகில் ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்றவர் இம்ரான் ஹாஷ்மி. இவரை 'சீரியல்கிஸ்ஸர்' என்றும் அழைத்தனர். காரணம் இம்ரான் ஹாஷ்மி எல்லா படங்களிலும் நாயகியை உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளில் நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வரியில் பதில் அளித்தார். ஐஸ்வர்யாராய் என்றதும் 'பிளாஸ்டிக்' என்றார். இது சர்ச்சையானது.
ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் என்றுஅவதூறாக எப்படி சொல்லலாம் என்று அவரது ரசிகர்கள் இம்ரான் ஹாஷ்மியை கடுமையாக திட்டியும், கண்டித்தும் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஐஸ்வர்யா ராய் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஜாலியாக அந்த வார்த்தையை சொல்லிவிட்டேனே தவிர, நானும் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகன்தான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனது பேச்சு யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.